Kongu Samayal

கிட்ஸ் கேரமல் பனானா

 

தேவையானவை

மிகவும் பழுக்காத வாழைப்பழம் - 2
மைதா மாவு - அரை கப்
சோள மாவு - கால் கப்
சர்க்கரை - அரை கப்
எள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
 

செய்முறை

மைதாவுடன் சோள மாவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
வாழைப்பழங்களை விருப்பம் போல துண்டுகளாக்கி வைக்கவும். 
நறுக்கிய பழத் துண்டுகளை மாவுக் கரைசலில் தோய்த்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் மாவில் தோய்த்தெடுத்த பழத் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு நுரைத்து நிறம் மாறும் பதம் வரும் வரை கிளறி கேரமல் தயார் செய்து கொள்ளவும்.
பொரித்தெடுத்த பழத் துண்டுகளை கேரமல்லில் போட்டெடுத்து, குளிர்ந்த நீரில் (ஐஸ் வாட்டர்) போட்டு உடனேயே எடுக்கவும்.
ஸ்வீட்டான கிட்ஸ் கேரமல் பனானா தயார். 
விருப்பப்பட்டால் வறுத்த எள்ளை இதன் மீது தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

கிட்ஸ் ஸ்வீட் கோன் பூரீஸ்

கிட்ஸ் ஸ்வீட் கோன் பூரீஸ்

தேவையானவை

பூரிக்கு பிசைந்த மாவு - ஒரு கப்

சர்க்கரை - ஒரு கப்

வட்ட வடிவ மூடி - ஒன்று (நடுத்தர அளவு)

எண்ணெய் - பொரிக்க

செய்முறை

மாவு பூரிக்கு பிசைவது போலவே இருந்தால் போதும்.

சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும்.

சிறிது மாவை எடுத்து உருட்டி, சப்பாத்தி போல் தேய்க்கவும்.

பிறகு அதன் மீது வட்ட வடிவ மூடியை வைத்து அழுத்தி வட்டமாக வெட்டி எடுக்கவும்.

வெட்டி எடுத்ததை கோன் போல செய்து, அதன் அடிப்பகுதியை மிதமாக அழுத்திவிடவும்.

இதே போல் மீதமுள்ள மாவிலும் கோன் போல தயார் செய்யவும்

அவற்றை சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்

எண்ணெய் வடிந்ததும் பொடித்த சர்க்கரையில் போட்டுப் பிரட்டி எடுக்கவும்.

துவரம்பருப்பு அடை

துவரம்பருப்பு அடை
 
தேவையானவை
 
துவரம்பருப்பு -1/4கப்
இட்லிஅரிசி -1கப்
வெங்காயம் -1
தேங்காய்துறுவல் -2ஸ்பூன்
காய்ந்தமிளகாய் -1
இஞ்சி -1துண்டு
கறிவேப்பிலை -சிறிது
எண்ணை -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
 
செய்முறை
 
அரிசி,பருப்பு இரண்டையும் 2மணிநேரம் ஊறவைத்து அத்துடன் தேங்காய்துறுவல்,காய்ந்தமிளகாய்,இஞ்சி, சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்தமாவில் உப்பு போட்டு கலந்து 1/2மணிநேரம் வைக்கவும்.
வெங்காயம்,கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிவைக்கவும்.
அரைத்தமாவில் நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை போட்டு கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில்வைத்து காய்ந்ததும் ஒருகரண்டி மாவை ஊற்றி சிறிது பரப்பிவிட்டு 1ஸ்பூன் எண்ணை விட்டு மூடிவைத்து வேகவிடவும்.
வெந்ததும் திருப்பிபோட்டு இரண்டு பக்கமும் வெந்தவுடன் எடுத்து சட்னியுடன் சாப்பிடவும்.
 

 

வெஜ் ராகிமாவு ஊத்தப்பம்

வெஜ் ராகிமாவு ஊத்தப்பம்
 
தேவையானவை
 
ராகிமாவு -1கப்
இட்லிமாவு -1/4கப்
சின்னவெங்காயம் -5
கேரட்துறுவல் -1/4கப்
பச்சைமிளகாய் -1
இஞ்சி -சிறுதுண்டு
கறிவேப்பிலை -சிறிது
உப்பு -தேவையான அளவு
எண்ணை -தேவையான அளவு
 
செய்முறை
 
வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை,இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ராகிமாவு,இட்லிமாவு,சிறிது உப்பு போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதம் கரைக்கவும்.
அத்துடன் நறுக்கியவற்றை போட்டு கேரட்துறுவலையும் போட்டு நன்கு கலக்கவும்.
1/2மணி நேரம் கழித்து தோசைக்கல்லை அடுப்பில்வைத்து காய்ந்தவுடன் ஒருகரண்டி மாவு ஊற்றி சிறிது பரப்பிவிட்டு 1ஸ்பூன் எண்ணை சுற்றி ஊற்றவும்.
மூடிவைத்து வேகவிடவும்.அடுப்பை சிம்மில்வைக்கவும்.
சிறிது வெந்தவுடன் திறுப்பிபோட்டு இருபக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்.சுவையான வெஜ் ராகிமாவு ஊத்தப்பம் ரெடி.இதை அப்படியே சாப்பிடலாம்.
 

பாசிபருப்பு ஒப்புட்டு

பாசிபருப்பு ஒப்புட்டு
 
தேவையானவை
 
பாசிபருப்பு -1கப்
மைதாமாவு -1கப்
வெல்லம் -3/4கப்
தேங்காய்துறுவல் -2ஸ்பூன்
ஏலக்காய் -4
நெய் -2ஸ்பூன்
எண்ணெய் -சிறிதளவு
 
செய்முறை
 
பாசிப்பருப்பை தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
மைதாமாவுடன் தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதம் கரைத்துவைக்கவும்.
வேகவைத்த பருப்புடன்,வெல்லம்,ஏலக்காய்,தேங்காய்துறுவல் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் 2ஸ்பூன் நெய்விட்டு அரைத்த கலவையை போட்டு கிளறவும்.அதில் உள்ள தண்ணீர் குறைந்து கெட்டியானவுடன் இறக்கி ஆறவிடவும்.
ஆறிய கலவையை எலுமிச்சை அளவு உருண்டைகளாக பிடித்துவைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில்வைத்துசூடாக்கவும்.
உருட்டிய பருப்புகலவையை மைதாமாவில் பிரட்டி தோசைக்கல்லில்வைத்து வடைபோல் தட்டிவிடவும்.
சிறிது எண்ணெய் ஊற்றி திருப்பிபோட்டு இரண்டுபக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்.

உளுந்துவடை

உளுந்துவடை
 
தேவையானவை
 
உளுந்து - 1கப்
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை -சிறிது
இஞ்சி -1சிறுதுண்டு
உப்பு -தேவையான அளவு
எண்ணை -1கப்
 
செய்முறை
 
உளுந்தை -1மணிநேரம் ஊறவைக்கவும்.
வெங்காயம்,கறிவேப்பிலை பொடியாக நறுக்கிவைக்கவும்.
இஞ்சியை தோல்நீக்கிவைக்கவும்.
உளுந்து ஊறியதும் கிரைண்டரில்(அ)மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.கடைசியில் பச்சைமிளகாய்,இஞ்சி,உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
அரைத்தமாவில் நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை போட்டு கலக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி காய வைக்கவும்.
ஒரு கப்பில் சிறிது தண்ணீர் எடுத்துவைக்கவும்.
எண்ணை காய்ந்தவுடன் தண்ணீரில் கையை நனைத்துக்கொண்டு மாவை 4விரல்களில் சிறிது எடுத்து உருட்டி பெருவிரலால் நடுவில் ஓட்டை செய்து எண்ணையில் போடவும்.
ஒருபுறம் வெந்தவுடன் திருப்பிவிட்டு இரண்டுபக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்.
மொறுமொறுப்பான உளுந்துவடை ரெடி.
 
 
குறிப்பு:
உளுந்துமாவு கெட்டியாக இருக்கவேண்டும்.அப்பொழுதுதான் வடையில் எண்ணை அதிகமாக இருக்காது.கையை தண்ணீரில் நனைக்கும்பொழுது தண்ணிர் நிறைய கையில் ஒட்டிக்கொண்டு இருக்ககூடாது.அப்படி தண்ணீர் இருந்தால் எண்ணையில் போடும்பொழுது எண்ணை மேலே தெரித்துவிடும்.மாவு கையில் ஒட்டாமல் இருப்பதற்க்குதான் கையை தண்ணீரில் நனைப்பது.

வெஜ் ரொட்டி ரோல்

வெஜ் ரொட்டி ரோல்
 
தேவையானவை
 
பொடியாக நறுக்கிய காய்கறி கலவை - ஒரு பெரிய கப்
சப்பாத்தி - 4
மிளகு - சிறிது
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - சிறிது
சாம்பார் தூள் / மிளகாய், தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
வேக வைத்த பட்டாணி - அரை கப்
 
செய்முறை
 
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் காய்கறி கலவையைச் சேர்த்து வதக்கவும்.
மிக்ஸியில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை அரைத்து, காய்கறிக் கலவையில் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பச்சை வாசனை போக வதங்கியதும், தூள் வகைகளைச் சேர்த்து பிரட்டி, தேவையான அளவு தண்ணீர் விட்டு மசாலா வாசனை போக கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து கெட்டியாக வரும் போது வேக வைத்த பட்டாணி மற்றும் நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து பிரட்டி இறக்கவும்.
தோசை கல்லைச் சூடாக்கி அதன் மேல் ஒரு சப்பாத்தியைப் போட்டு அதன் நடுவில் தயார் செய்த மசாலாவை வைத்து சுருட்டி மூடிவிடவும்.
டேஸ்டி வெஜ் ரொட்டி ரோல் ரெடி.
 
குறிப்பு:
சப்பாத்தியை சுருட்டும் போது உடையாமல் இருப்பதற்காக முக்கால் பங்கு மல்டிக்ரெய்ன் ஆட்டாவும், கால் பங்கு மைதாவும் பயன்படுத்தி சப்பாத்தியை தயார் செய்துக்கலாம். வெறும் கோதுமை மாவு என்றால் மைதா மாவு சேர்க்கத் தேவையில்லை.
குழந்தைகளுக்கு கொடுக்க உள்ளே துருவிய சீஸ் கூட சேர்க்கலாம்.

ஓட்ஸ் அடை

ஓட்ஸ் அடை
 
தேவையானவை
 
ஓட்ஸ் - ஒரு கப்
கடலைப்பருப்பு - கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
உளுத்தம் பருப்பு - கால் கப்
பெரிய வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 6 பற்கள்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு சிறிய கட்டு
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை
 
பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்து 3 முறை கழுவிவிட்டு, தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். ஊற வைத்த பருப்பு வகைகளுடன் சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழையைச் சேர்க்கவும்.
அதனுடன் பொடி செய்த ஓட்ஸ் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்
தோசை கல்லைச் சூடாக்கி, மாவை மெல்லிய தோசை போல ஊற்றி எண்ணெய் விட்டு வேகவிடவும்.
சற்று நேரம் கழித்து திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான, சத்து நிறைந்த ஓட்ஸ் அடை தயார்.

கேள்வரகு – ராகி களி

கேள்வரகு – ராகி களி
 
தேவையானவை:
4 டம்ளர்* தண்ணீர்
2 டம்ளர்* கேள்வரகு – ராகி மாவு
* 225ml அளவு டம்ளர்(காபி டம்ளர்).
 
செய்முறை:
டுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 4 டம்ளர் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்தவுடன் கேள்வரகு மாவை கொஞ்சம் கொஞ்சமாய் கொதிக்கும் நீரில் போட்டுக் கொண்டே கிளறவும்.கட்டி கட்டாமல் கிளறுதல் முக்கியம்.(ரவா கிண்டுதல் போல.)
 
பின்னர் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.
மாவு அடியில் ஒட்டாது கிளறிக் கொண்டே இருக்கவும்.
மாவு கட்டி கட்டியிருந்தால் உடைத்துவிட்டு கிளறவும்.
மாவு கலவை இறுகி களி போல வந்ததும் இறக்கி பரிமாறலாம்.
களி சூடாக உண்டால் ருசி அதிகம்.

பாசிபருப்பு தோசை

பாசிபருப்பு தோசை
 
தேவையானவை:
பாசிபருப்பு - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
சிறிய வெங்காயம் - கால் கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை கொத்தமல்லி - தேவையான அளவு
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
 
செய்முறை:
பாசிபருப்பை நன்கு ஊற வைக்கவும். 
சிறிய வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்
பாசிப்பருப்பை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதனுடன் மிளகாய், சிறிய வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம், உப்பு சேர்க்கவும்
தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து விடவும்
தோசைக்கல்லை சுட வைத்து அதில் மாவை தோசையாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விடவும்
சிவந்ததும் திருப்பி போட்டு வேக விடவும். இது நன்கு வேக வேண்டும். மிதமான தீயிலேயே சுட வேண்டும்.
சூடான சத்தான பாசிபருப்பு தோசை ரெடி.

கேழ்வரகு கார அடை

கேழ்வரகு கார அடை
 
தேவையானவை:
கேழ்வரகு மாவு - தேவையான அளவு,
உப்பு - தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2,
முருங்கைக் கீரை - 1 கைப்பிடி,
எண்ணெய் - சிறிது.
 
செய்முறை:
எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருள்களையும் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். 
ஒரு ஈரத் துணியின் மேல் அடை போலத் தட்டி, சூடான தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இரு புறமும் நன்கு வேக விட்டு எடுக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக் கீரையை வதக்கியும் சேர்க்கலாம்.

கம்பு இட்லி

கம்பு இட்லி
 
தேவையானவை:
கம்பு அல்லது கம்பரிசி - 2 கப்,
முழு உளுந்து - அரை கப்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
ஆமணக்கு விதை -  6 (விருப்பபட்டால்),
உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை:
முழு கம்பு எனில் 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். 
கம்பரிசி எனில் 3 மணி நேரம் ஊறவைக்கவும். 
வெந்தயம், ஆமணக்கு விதை சேர்த்து 3  மணிநேரம் ஊறவைக்கவும். 
உளுந்தை அரைமணி நேரம் ஊறவைக்கவும். 
கிரைண்டரில் முதலில் வெந்தயம், ஆமணக்கு போட்டு 10 நிமிடம்  அரைக்கவும். 
வெந்தயம் நுரைத்து வரும்போது கம்பு சேர்த்து இட்லிமாவு பதத்தில் அரைத்து எடுக்கவும். 
உளுந்தை நுரைக்க அரைத்து எடுத்து, கம்பு  மாவுடன் கலந்து 6 மணி நேரம் வைக்கவும். 
மாவில் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வைத்து பிறகு இட்லியாக ஊற்றவும்.
 
குறிப்பு:
கத்தரிக்காய் கொத்சு, தக்காளி சட்னியுடன் பரிமாறவும். 4 ஆமணக்கு விதை இட்லியை மிருதுவாக்கும். 
தோலுடன் இருந்தால் கம்பு முழுதாக  அரைபடாது, கலரும் சிறிது வேறுபடும். 
எண்ணெய் தடவி இட்லி வார்ப்பதைத் தவிர்க்கவும். 
இட்லியின் மேல் பகுதி வறண்டு விடும். 
துணியில்  ஊற்றினால் மிருதுவாக கம்புக்கு உண்டான வாசனையுடன் சுவையாக இருக்கும். 
உப்பை கடைசியில் சேர்ப்பதால் மாவு அதிகம் புளிப்பதைத்  தவிர்க்கலாம்.

கச்சாயம்

கச்சாயம்

தேவையானவை
பச்சரிசி  - ஒரு கப், 
பாகு வெல்லம் - அரை கப், 
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, 
நெய் - ஒரு கப்.
 
செய்முறை:  
பச்சரிசியைத் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடித்து நிழலில் உலர்த்தி, நைஸாக பொடித்து, சிறிய கண்ணுள்ள ஜல்லடையில் 2, 3 முறை சலிக்கவும். 
வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி பாகு வைக்கவும். 
பாகு உருண்டை பதம் வந்தபின் அதில் மாவை கொட்டிக் கிளறவும். (எப்போதும் மாவு அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்). 
கிளறிய மாவை எடுத்துப் பார்க்கும்போது மாவு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது... லூஸாகவும் இருக்கக் கூடாது. 
மாவின் மீது நெய் தடவி வைக்கவும் (மாவை உபயோகிக்கும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்). 
அடுத்த நாள் வாழை இலையில் நெய் தடவி, மாவை உருட்டி வைத்து, லேசாக தட்டவும். கடாயில் நெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, தட்டி வைத்த கச்சாயத்தை போட்டு, உடனே திருப்பிப் போட்டு எடுக்கவும்.
இதனுடன் தேங்காய் துருவல், நறுக்கிய வாழைப்பழம் சேர்த்து சாப்பிடவும்.

சோள வடாம்

சோள வடாம்
 
தேவையானவை
தோல் நீக்கிய வெள்ளை சோளம் - ஒரு கப், 
காய்ந்த மிளகாய் - 3,
ஒன்றிரண்டாக பொடித்த மிளகு - சிறிதளவு, 
உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை:  
சோளத்தைக் கழுவி, 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து... பின்னர் நீரை வடித்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நீர் விட்டு நைஸசாக அரைக்கவும். இதனுடன் தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்து, பொடித்த மிளகு சேர்க்கவும். இந்த மாவை 3 மணி நேரம் புளிக்கவிடவும். 
மாவை கரண்டியில் எடுத்து வடாம் ஸ்டாண்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்க... 2 நிமிடத்தில் வெந்துவிடும். 
இதனை உரித்து எடுத்து உடனே சாப்பிடலாம். 
நிழலில் உலர்த்தி எண்ணெயில் பொரிக்கலாம். 
உடனே சாப்பிடும்போது இட்லி மிளகாய்ப்பொடியில் நல்லெண்ணெய் கலக்கி தொட்டு சாப்பிடலாம்.
வடாம் ஸ்டாண்ட் கிடைக்கவில்லை என்றால், வாழை இலை, புரச இலையைப் பயன்படுத்தி ஆவியில் வேக வைக்கலாம்.

புழுங்கலரிசி இலை வடாம்

புழுங்கலரிசி இலை வடாம்
 
தேவையானவை
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், 
மிளகு -  (ஒன்றிரண்டாக பொடிக்கவும்) - ஒரு டீஸ்பூன், 
சீரகம் - ஒரு டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை:  
அரிசியைத் தண்ணீரில் கழுவி 1 அல்லது 2 மணி நேரம் ஊற வைக்கவும். 
பின்னர் நீரை வடித்து, தேவையான தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். 
மாவை 4 அல்லது 5 மணி நேரம் புளிக்க வைக்கவும் (அதிக புளிப்பு வேண்டாம் என்பவர்கள் 3 மணி நேரம் புளிக்க வைக்கலாம்). 
பிறகு, மாவில் தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகு, சீரகம் சேர்த்துக் கலக்கவும். 
வடாம் ஸ்டாண்ட் அல்லது புரச இலை அல்லது வாழை இலையில் மாவை லேசாக ஊற்றி, ஆவியில் வேக வைத்து, வெந்ததும்  எடுத்து உரித்து உடனே சாப்பிடலாம். 
இதை நிழலில் உலர்த்தி எண்ணெயில் பொரிக்கலாம். 
உடனே சாப்பிடும்போது இட்லி மிளகாய்த்தூள், சூடான நெய் சேர்த் துக் கலந்து தொட்டு சாப்பிடலாம்.

ஸ்பெஷல் வாழைக்காய் பஜ்ஜி

ஸ்பெஷல் வாழைக்காய் பஜ்ஜி
 
தேவையானவை
வாழைக்காய் - ஒன்று, 
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், 
துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், 
சலித்த கடலை மாவு - கால் கப், 
காய்ந்த மிளகாய் - 4, 
தனியா - ஒரு டீஸ்பூன், 
பெருங்காயத்தூள், 
கறிவேப்பிலை - சிறிதளவு, 
சோடா உப்பு - ஒரு சிட்டிகை, 
உப்பு - தேவைக்கேற்ப, 
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
 
செய்முறை
இட்லி புழுங்கல் அரிசி, துவரம்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 
பிறகு நீரை வடித்து, காய்ந்த மிளகாய், தனியா, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்கவும். 
அரைத்த உடனேயே அதனுடன் கடலை மாவு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும். 
ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்துக் கலக்கவும். 
பிறகு, வாழைக்காயை மெலிதாக சீவி மாவில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
தேங்காய் சட்னி இதற்கு ஏற்ற சைட் டிஷ். சோடா உப்புக்கு பதில் ஒரு சிறிய கரண்டி அளவு தோசை மாவு சேர்க்கலாம்.

தேங்காய் போளி

தேங்காய் போளி
 
தேவையானவை
கோதுமை மாவு - ஒரு கப், 
மைதா - 3 டீஸ்பூன், 
நல் லெண்ணெய் - தேவையான அளவு, 
நெய் - தேவையான அளவு, 
வாழைப் பழம் - ஒன்று.
 
பூரணத்துக்கு:
தேங்காய் துருவல் - 2 கப், 
பொடித்த வெல்லம் - அரை கப், 
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
 
செய்முறை:  
கோதுமை மாவு, மைதாவுடன் தேவையான தண்ணீர்  சேர்த்துக் கலந்து, சப்பாத்தி மாவைவிட தளர்வாக பிசையவும். 
பிறகு அதன் மேல் கால் கப் நல்லெண்ணெய் விட்டு 3 மணி நேரம் மூடி வைக்கவும். 
தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூளை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் விடாமல் நைஸாக அரைக்கவும். பிறகு, பொடித்த வெல்லம் சேர்த்து அரைக்கவும். 
இதனை அப்படியே கடாயில் போட்டு, இதில் உள்ள நீர் சுண்டும் வரை வறுக்கவும். 
ஆறியவுடன் உருண்டை களாக உருட்டவும்.
மேல் மாவு சிறிது எடுத்து ஒரு வாழை இலையில் வைத்து கைகளால் பரவலாக தட்டி, அதில் பூரண உருண்டை வைத்து மூடி, அப்படியே தோசை வடிவத்தில் போளியாக தட்டவும். 
சூடான தோசைக்கல்லில் போளியைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசைத்திருப்பியால்  எடுத்து... அதன் மேல் நறுக்கிய வாழைப்பழம், நெய் விட்டு சூடாகப் பரிமாறவும்.

தட்ட வடை

தட்ட வடை
 
தேவையானவை
இட்லி புழுங்கல் அரிசி  - ஒரு கப், 
பச்சரிசி - கால் கப், 
உளுத்தம்பருப்பு -  2 டீஸ்பூன், 
காய்ந்த மிளகாய் - 6, 
பெருங்காயத்தூள் - சிறிதளவு, 
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், 
எள் - சிறிதளவு, 
எண்ணெய், 
உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை
உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்து, சலிக்கவும். 
புழுங்கல் அரிசி, பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து... காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். 
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து, மாவுடன் சேர்த்து, பொடித்த உளுத்தம் பருப்பு, எள் சேர்த்துக் கலக்கவும். 
இதனுடன் சிறிது சூடான எண் ணெய் சேர்த்துப் பிசைந்து, கையில் எண்ணெய் தொட்டு, கொஞ்சம் மாவை எடுத்து வாழை இலையில் வைத்து லேசாக தட்ட வும். 
தட்டியவற்றை வெள்ளை காட் டன் துணியில் போட்டு, 5 நிமிடம் கழித்து சூடான எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

மகிழம்பூ முறுக்கு

மகிழம்பூ முறுக்கு
 
தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - 4 கப்,
பொட்டுக்கடலை மாவு - ஒரு கப்,
பெருங்காயம் - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 6 அல்லது 7,
வெண்ணெய் - சிறிதளவு,
எள் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
 
செய்முறை:  
அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின்னர் காய்ந்த மிளகாய், பெருங் காயம், உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும்.
அதனுடன் பொட்டுக்கடலை மாவு, தண்ணீரில் சுத்தம் செய்த எள் மற்றும் வெண்ணெய் சேர்த்துப் பிசையவும்.
மாவை மகிழம்பூ அச்சில் (கடைகளில் கேட்டால் கிடைக்கவும்) போட்டு, காய்ந்த எண்ணெயில் முறுக்குகளாக பிழிந்து, நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

கார அச்சு முறுக்கு

 

கார அச்சு முறுக்கு
 
தேவையானவை
பொன்னி பச்சரிசி - 2 கப், 
காய்ந்த மிளகாய் - 5, 
சலித்த பொட்டுக்கடலை மாவு - கால் கப், 
சுத்தம் செய்த எள் - ஒரு டீஸ்பூன், 
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, 
பெருங்காயத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.
 
செய்முறை:  
பச்சரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் நீரை வடிகட்டி...  காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும்.
இதனுடன் பொட்டுக்கடலை மாவு, எள் சேர்த்துக் கரைக்கவும் (மாவு தண்ணியாக இருக்கக் கூடாது. பஜ்ஜி மாவு பதம் இருக்க வேண்டும்). 
கடாயில் முறுக்கு அச்சு முழுகுமளவுக்கு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அச்சை எண்ணெயில் போடவும். 
அச்சு சூடானதும், வெளியில் எடுத்து மாவில் தோய்த்து பிறகு கைப்பிடியை பிடித்துக்கொண்டு எண்ணெயில் விடவும். 
அச்சில் உள்ள மாவு கழன்று விழுந்துவிடும். மாவு விழவில்லை என்றால், நீண்ட கம்பியால் தள்ளிவிடலாம். 
முறுக்கு இருபுறமும் வெந்ததும் எடுத்து, பரிமாறவும்.
 
குறிப்பு: மாவை அரைத்தவுடன் முறுக்கு செய்யவும். மாவு புளிக்கக் கூடாது.
 

தக்காளி தோசை

 

தக்காளி தோசை

தேவையானவை
இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கப், 
துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், 
தக்காளி - 4 (நறுக்கவும்), 
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், 
காய்ந்த மிளகாய் - 4, 
கறிவேப்பிலை - சிறிதளவு, 
தனியா - 2 டீஸ்பூன், 
பெருங்காயத்தூள் - சிறிதளவு, 
இஞ்சி - சிறிய துண்டு, 
உப்பு, 
எண்ணெய் - தேவையான அளவு.
 
செய்முறை:  
அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் கழுவி, ஒன்றுசேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு, கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை (எண்ணெய், வெங்காயம் நீங்கலாக) சேர்த்து கொரகொரவென்று அரைத்து, வெங்காயத்தை சேர்க்கவும். மாவை ஒரு மணி நேரம் புளிக்கவிடவும். 
பிறகு, சூடான தோசைக்கல்லில் மாவை மெலிதான தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, முறுகலானதும் திருப்பிப் போட்டு, நன்றாக மொறுமொறுவென்று வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.
இதற்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடலாம்.

அரிசி வடை

அரிசி வடை

தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி - 6 கப்,
துவரம்பருப்பு - ஒரு கப்,
காய்ந்த மிளகாய் - 8,
தனியா - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை,
கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு,
நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 3 கப்,  
நறுக்கிய கொத்தமல்லித் தழை - கால் கப்,
எண்ணெய் - பொரிக்க தேவை யான அளவு,
உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை:  
அரிசி, துவரம்பருப்பு இரண்டையும் தண்ணீரில் கழுவி, ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு நீரை வடித்து அதனுடன் தனியா, உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கிரைண்டரில் அரைக்கவும்.
ரவை பதத்துக்கு அரைபட்டதும் நறுக்கிய சாம்பார் வெங்காயம் போட்டு  2 சுற்று சுற்றி வடை பதத்துக்கு அரைக்கவும் (மாவு ரொம்ப கெட்டியாகவும் இருக்கக் கூடாது.... ரொம்ப இளக்கமாகவும் இருக்கக் கூடாது).
கொத்தமல்லியை இதனுடன் சேர்த்துக் கலக்கவும்.
மாவை வடைகளாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு, சிவந்ததும் எடுக்கவும்.
இதற்கு தக்காளி ரச அடி வண்டல், தயிர் போன்றவற்றை தொட்டுக் கொள்ளலாம்.